Tuesday 23 October 2012

ரோஜாப்பூ

இதழ்களை விரித்தாய்
அழகாய்ச் சிரித்தாய்
வண்ணங்களில் மலர்ந்தாய்
எண்ணங்களில் நிறைந்தாய்
கூந்தலில் குடியேறினாய்
மாலைக்கு மணமாகினாய்
நேரமானதும் நினைவிழந்தாய்
இரவானதும் மறைவானாய்
மறுஜென்மம் உருவெடுப்பாய்
மறுசெடியில் ஜனனிப்பாய் !!!

No comments:

Post a Comment