Monday 28 May 2012

வரதட்சணை

அம்பாள் கொடுப்பது வரம்
அதற்கு நாம் அன்பாய்க் கொடுக்கிறோம் தட்சணை !!!
குடும்பம் தலைத்தோங்க வரம் தர வரும்
இந்த அம்மனிடம் மட்டும் ஏன் கேட்கிறோம் தட்சணை ???
மாறவேண்டும் இந்த ம(ப)ணமுறை
மாற்றவேண்டும் வருகிற தலைமுறை !!!

Thursday 17 May 2012

வெயில்

வெப்பக் கதிர்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை
தாக்கத்தின் கொடுமை "சன்"னுக்கு புரிவதில்லை !!!
வெளிச்சம் கொடுக்கும் ஒளி வெள்ளம்   
உனக்கேன் இந்த சுட்டெரிக்கும் உள்ளம் ???

Sunday 13 May 2012

தாய்

தண்ணீர் குடிக்க மறந்தாலும்
தாயைக் கவனிக்க மறவாதே !!!

அம்மா

நிதானமான உணவு
நிம்மதியில்லா நித்திரை
கடினமான வலி
கனிவான கவனிப்பு
கருவறையிலுள்ள கருவுக்காக !!!
அன்பான அணைப்பு
ஆரோக்கியமான பாலூட்டு
இனிமையான தாலாட்டு
சிரத்தையோடு சீராட்டு
அழகான கைக்குழந்தைக்காக !!!
தவழ்வதை ரசிப்பது  
நடக்க பழக்குவிப்பது  
பேச பயிற்றுவிப்பது
சரியான உணவளிப்பது  
வளரும் பருவத்தில் !!!
பழக்கவழக்கம் பரிசளித்து
பள்ளிசெல்லப் பழக்கி
உடல்நலம் பேணி
ஒழுக்கத்தை அடித்தளமாக்கி
வாழ்க்கையில் வழிகாட்டுவது 
பள்ளிப் பருவத்தில் !!!
மனப்போக்கில் கட்டுப்பாடு
அளவான அறிவுரை 
தெளிவான சிந்தனை 
சிறப்பான செயல்பாடு
பண்பாட்டை வலியுறுத்துவது 
இளமைப் பருவத்தில் !!!
குடும்பத்தின் பெருமை
பொறுமையின் உரிமை  
அரவணைக்கும் அருமை 
பாசத்தின் இனிமை
கண்டிப்பின் வலிமை
முதுமைப் பருவத்தில் !!!
பலவேறு பரிமாணத்தில்
ஆண்டவணனின் பலமுகமாய்
பகலிரவு பாராமல்
தனக்கென வாழாமல்
மகர்கென வாழும் 
மனித தெய்வம் அன்னை !!!
தாயின் கண்ணில்
தவறியும் நிரில்லாமல் 
மனம்நிறை மகிழ்ச்சியை 
மறவாமல் நிறைப்பது
நம் கடமை !!!
பசியில்லாமல் வளர்த்த
அமுதசுரபியான அன்னை
வாய் சோற்றுக்காக
கலங்கக் கூடாது கண்ணை   !!!
நாம் நிம்மதியாய் தூங்கத்தன்  
மடியை படுக்கையாக்கியது தாய்
வயோதிகத்தில் வாழ்விடம்
தேடி அலையவிடாமல்
தன்மடியில் வாழவைக்கணும் சேய் !!!
அன்னை நம் வாழ்க்கை !!!
அன்னை நம் உயிர் !!!
அன்னை நம் தெய்வம் !!!

Friday 11 May 2012

பாதம்

உடம்பில் எடை  
பூமியில் தடை
தாங்கும் இடை !!!

Sunday 6 May 2012

பாதி


அன்பு பாதி அறிவுரை பாதி
நம்பிக்கை பாதி நல்லுழைப்பு பாதி
சந்தோசம் பாதி சங்கடம் பாதி
உணவு பாதி உடற்பயிற்சி பாதி
புரிந்துதவி பாதி புண்ணியம் பாதி
மருந்து பாதி மனக்கட்டுப்பாடு பாதி
உறவு பாதி உரிமை பாதி
அவள் பாதி அவன் பாதி
சரி பாதி !!! சரிவில்லா வாழ்வு !!!