Sunday 13 May 2012

அம்மா

நிதானமான உணவு
நிம்மதியில்லா நித்திரை
கடினமான வலி
கனிவான கவனிப்பு
கருவறையிலுள்ள கருவுக்காக !!!
அன்பான அணைப்பு
ஆரோக்கியமான பாலூட்டு
இனிமையான தாலாட்டு
சிரத்தையோடு சீராட்டு
அழகான கைக்குழந்தைக்காக !!!
தவழ்வதை ரசிப்பது  
நடக்க பழக்குவிப்பது  
பேச பயிற்றுவிப்பது
சரியான உணவளிப்பது  
வளரும் பருவத்தில் !!!
பழக்கவழக்கம் பரிசளித்து
பள்ளிசெல்லப் பழக்கி
உடல்நலம் பேணி
ஒழுக்கத்தை அடித்தளமாக்கி
வாழ்க்கையில் வழிகாட்டுவது 
பள்ளிப் பருவத்தில் !!!
மனப்போக்கில் கட்டுப்பாடு
அளவான அறிவுரை 
தெளிவான சிந்தனை 
சிறப்பான செயல்பாடு
பண்பாட்டை வலியுறுத்துவது 
இளமைப் பருவத்தில் !!!
குடும்பத்தின் பெருமை
பொறுமையின் உரிமை  
அரவணைக்கும் அருமை 
பாசத்தின் இனிமை
கண்டிப்பின் வலிமை
முதுமைப் பருவத்தில் !!!
பலவேறு பரிமாணத்தில்
ஆண்டவணனின் பலமுகமாய்
பகலிரவு பாராமல்
தனக்கென வாழாமல்
மகர்கென வாழும் 
மனித தெய்வம் அன்னை !!!
தாயின் கண்ணில்
தவறியும் நிரில்லாமல் 
மனம்நிறை மகிழ்ச்சியை 
மறவாமல் நிறைப்பது
நம் கடமை !!!
பசியில்லாமல் வளர்த்த
அமுதசுரபியான அன்னை
வாய் சோற்றுக்காக
கலங்கக் கூடாது கண்ணை   !!!
நாம் நிம்மதியாய் தூங்கத்தன்  
மடியை படுக்கையாக்கியது தாய்
வயோதிகத்தில் வாழ்விடம்
தேடி அலையவிடாமல்
தன்மடியில் வாழவைக்கணும் சேய் !!!
அன்னை நம் வாழ்க்கை !!!
அன்னை நம் உயிர் !!!
அன்னை நம் தெய்வம் !!!

No comments:

Post a Comment