Friday 4 September 2015

நிலவா - நீயா

நினைவு தெரிந்த நாள் முதலாய் 
நிலவை ரசித்துக் கொண்டிருந்தேன் இரவில் 
நித்திரையும் வந்தது நிம்மதியாய் உடலில் 

நீ வந்து நினைவில் நின்றாய்
நிலவும் மறைந்து போனது நிசியில்  
நித்திரையும் இறந்தது உன் நினைவில்

நீ தோன்றினாய் சந்தோசத்தின் சாவியாய் 
நிஜமென நினைத்து நிழல் உலகில் 
நித்தமும் மிதந்தேன் கனவு வலையில் 

நீ யாரேன்றாய் ஓர் ஊடலில் 
நிலைக்கா வார்த்தை அது நம்மில் 
நினைத்தேன் என்னில் என்னவோ உன்னில் 

நிவர்த்தி ஆகாதப் புதிராய் நீ  
நீ வேண்டாம் என்றாய் இடையில் 
நினைவோ உன் வாழ்க்கை வழியில் 

நீக்க முடியவில்லை உன் நினைவை  
நித்திரை வரும் நேரம் நிலவில் 
நிழலாய் உன் முகம் அழகில் 

நீ நீங்கினா நாள் முதலாய்  
நித்தமும் நிலவோடு தான் நித்திரை 
நிஜமாய் வென்றது இயற்கை !!!