Sunday 14 October 2012

என்னவாகும் ???

அந்தப் பக்கம்
இந்தப் பக்கம்
பார்த்தும் தயக்கம்
உடம்பும் வியர்க்கும்
இருந்தும் நெருங்கும்
விருந்தும் வருந்தும்
அருகில் நிற்கும்
உருவில் வெட்கம்
சிரித்தால் சொர்க்கம்
நினைத்தால் திக்கும்
முயற்சி எடுக்கும்
பலன் கொடுக்கும்
கைகள் கோர்க்கும்
மெய்கள் சேர்க்கும்
கட்டி அணைக்கும்
முத்தம் கொடுக்கும்
அடுத்து நினைக்கும்
கதவு திறக்கும்
தூக்கம் கெடுக்கும்
கனவில் மயக்கம்
மனக்கண் விழிக்கும்  
இதயம் தவிக்கும்
நிழலும் நிஜமாகுமா ???
கனவும் நனவாகுமா ???

No comments:

Post a Comment