Friday 10 August 2012

கண்ணீர்

கண்ணுக்குத் தெரியாத
வலியையும் வேதனையையும்
வெளிப்படுத்தக் கண்களால் 
உருவாக்கப்படும் தண்ணீர் !!!
உற்பத்தியான உடன்
அருவியாய்க் கொட்டும்
கன்னம் எனும்
மலை முகடுகளிலிருந்து !!!
இவ்வருவியில் மட்டும்
நீர்வரத்துக் குறைய  
விரும்பும் மனம் !!!
வறண்ட அருவி
வருத்தமில்லா வாழ்வு !!!
நீரில்லா அருவி
நிம்மதியான வாழ்வு !!!
ஆனந்தம் எனும்
அருவி அவ்வப்போது
அளவோடு வந்தால்
அருமையான வாழ்வு !!!

No comments:

Post a Comment