Monday 27 August 2012

பருவ காலங்கள்

கோடையில் விழும் கடும் இடியில் 
வந்து விழுந்தாய் என் மன மடியில் 
கார்காலத்தில் பெய்யும் மழைத் துளியில்
கண்காட்சியாய் நிறைந்தாய் என் கரு விழியில்
வசந்தத்தில் வரும் தென்றல் காற்றில் 
கலந்து ஓடினாய் என் இரத்த ஊற்றில்  
பனிக் காலத்தில் பொழியும் பனியில்
உரமாக உறைந்தாய் என் உயிர் நுனியில்
இலையுதிர் காலத்தில் உதிரும் இலையில் 
சருகாய் உதிர்ந்தாய் என் இதய வலையில்
இனியக் காலச்சக்கரம் மீண்டு(ம்) வருமென்று 
காத்திருக்கிறேன் என் உயிர் கொண்டு !!!

No comments:

Post a Comment