Friday 6 July 2012

வேண்டும் ஈழம் - தமிழ் ஈழம் - தனி ஈழம்

வெந்து வீணான விளை நிலங்கள்
வெறுமையாய் இருக்கும் வெடியில் வீழ்ந்த வீடுகள்
குண்டுகளால் சிதைந்த வாகனம் பார்க்காத சாலைகள்
கட்டடம் களவு போன மருத்துவ மனைகள்

ஆதிகால மனிதர்களாய் உடுக்க உடுப்பின்றி
பிச்சைக்காரர்களாய் உண்ண உணவின்றி
அனாதைகளாய் அன்பாய் அணைக்க உறவின்றி
அடிமைகளாய் அவதியுடன் சுதந்திர உணர்வின்றி
கொலைக் கைதிகளாய் விடுதலை நீதியின்றி
பருந்துக்குப் பலியாவோமோ எனும் பயத்தில் குஞ்சுகளாய்     
கம்பி வேலிகளுக்கு நடுவில் கவலையோடு
முள் வெளிகளுக்கு மத்தியில் முகவரியில்லாமல்

குழந்தை அழுகுரல் ஆங்காங்கே தாயைத் தேடி
மனைவி ஓலம் ஊரெங்கும் கணவனைத் தேடி
பெண் விசும்பல் வீடெங்கும் தந்தையைத் தேடி
முதியோர் கதறல் வீதியெங்கும் பிள்ளையைத் தேடி

குருவிக்கு நல்ல கூடுண்டு தங்க
சிங்கத்துக்கு குகையுண்டு ஓய்வு எடுக்க
மீனுக்கு நீர் நிலையுண்டு வாழ
ஐந்தறிவு ஜீவனுக்கு அமைதியான இடமுண்டு
ஆறறிவு மக்களுக்கு அணுவளவில் உறைவிடமில்லை  
 
 
நெஞ்சைப் பிளக்கும் வஞ்சகத் திட்டம்
அப்பாவிகளைக் கொல்ல அடுக்கடுக்காய் ஆலோசனை
பக்கத்து நாடுகளுடன் படுகேவலமான பரிபாலனை
பாலில் விஷம் கலக்க பன்முகப் பேச்சு

ஆண் மகனை அடித்து
அசைய முடியாமல் அம்மணமாக்கி
கண்ணைக் கட்டி காவளித்தனமாக
பின் புறமிருந்து பிடரியில்
துப்பாக்கியால் சல்லடையாகத் துளைத்து

தமிழ்ப்பெண் மகளைத் தரமில்லாமல்
மனிதாபமில்லாமல் மானபங்கப்படுத்தி
தன் தாய் மனைவி மகள் அக்கா தங்கையாக
நினைக்காமல் அட்டூழியம் செய்து
சின்னாப் பின்னமாகச் சிதைத்து
சித்திரவதை செய்து பிணமாக்கி

ஒன்றும் அறியாக் குழந்தைகளை
துப்பாக்கி முனையில் தூங்கவைத்து
துணியில்லாமல் துவம்சம் செய்து
உணவில்லாமல் உருக்கி எடுத்து
அன்னை அன்பில்லாமல் அரவணைப்பிலாமல்
அனாதைகளாக்கி அடிமைகளாக்கி

வெள்ளைக்கொடி காட்டி வந்த வேந்தர்களை
வெடிகுண்டு போட்டு வேரோடு
வெற்று உடல்களாக சிதறச் செய்து
போர் மரபை மீறியப் பொட்டைகள் (நரிகள்)
வெறி நாய்கள் சொறி நாய்கள்

தவறான வழியில் தமிழ் மக்களை
தகுதியல்லாத கயவர்கள் தடுமாறச் செய்தது
தோல்வியல்ல சரியான துவக்கம் தான்
வெற்றி திலகத்தை வேகமாக வென்றிட
வேற்று மனமாக இல்லாமல் வேற்று நாடு
எனும் மாறுபட்டக் கருத்தில்லாமல் தமிழன்
தரணியில் எங்கிருந்தாலும் ஒன்றாக இணைந்து
மாற்றுக் கருத்துக்கு செவி சாய்க்காமல்
மாற்று எண்ணமுள்ள செந்தமிழ் மக்களை
ஒரே கருத்தில் ஒருங்கிணையச் செய்து
உலகம் உண்மையை உணர உழைத்து
ஐ.நா-வை அணுகி அநியாயத்தை எடுத்தியம்பி
தமிழ் ஈழத்தின் முக்கியத்தை முன்வைத்து

வாதாடி நீதியை நிலை நாட்டி
வாழையடி வாழையாகத் தமிழர்கள் தனி நாட்டில்
நிம்மதியாக நிர்பந்தமின்றி வாழ
சுதந்திரமாகச் சுற்றி வாழ
உற்சாகமாக உழைத்து வாழ
சகலமும் பெற்று சந்தோசமாக
வாழப் பெற வேண்டும் தனி ஈழம் !!!
தமிழர் ஈழம் !!! தரமான ஈழம் !!! தன்னிகரில்லா ஈழம் !!!
ஒன்று படுவோம் !!! தோள் கொடுப்போம் !!!
வென்றிடுவோம் !!! ஈழம் பெறுவோம் !!!

No comments:

Post a Comment