Monday 2 July 2012

நீ தானே என் பொன் வசந்தம்

நீ தானே என் பொன் வசந்தம்
நீங்காத நினைவுகளே நம் காதல் சுகந்தம்
நீ தானே என் கண் விழி
நீங்காத நினைவுகளே நம் கனவு மொழி
நீ தானே என் இதய துடிப்பு
நீங்காத நினைவுகளே நம் உறவின் பிடிப்பு
நீ தானே என் வாழ்க்கைப் பாதை
நீங்காத நினைவுகளே நம் பிரிவில் போதை
நீ தானே என் வாழ்வின் சிகரம்
நீங்காத நினைவுகளே நம் அன்பின் அகரம்
நீ தானே என் வலிக்கு மருந்து
நீங்காத நினைவுகளே நம் மனதுக்கு விருந்து
நீ தானே என் பொன் வசந்தம்
நீண்ட காலம் வாழ வேண்டும் நம் காதல் மகரந்தம் !!!

No comments:

Post a Comment