Monday 31 December 2012

புது வருடம்

வாழ்க்கை எனும் நன்செய் நிலத்தில்
தன் நம்பிக்கையை விதையாக விதைத்து
உதவும் எண்ணத்தை உரமாகப் பரப்பி
செழிப்பானச் சிந்தனையை நீராகப் பாய்ச்சி
சரியான உழைப்பைப் பயிராக வளர்த்து
தவறான செயல்களைக் களையாக எடுத்து
உடல் பயிற்சியுடன் ஆரோக்கியத்தை வேலியாக்கி
வளமான வருமானத்தை அறுவடை செய்து
வருடம் முழுதும் வாழ்நாள் முழுவதும்
மிகச் சிறப்பான வாழ்க்கை வழங்க
புத்தொளியோடு மலரட்டும் புதுவருடம்

புது வசந்தமாக வீசட்டும் புதுவருடம்
புது வழிகாட்டியாக வரட்டும் புதுவருடம் !!!

No comments:

Post a Comment