Thursday 5 April 2012

பரதேசி

பயணிக்க நல்ல வாகனம் தேவையில்லை
கால்களே சிறந்த சக்கரம் இந்த மனிதருக்கு
உடுக்க உடை தேடாது இந்த உடம்பு
தன் தோலையே உடுப்பாய் நினைக்கும் இவர் மனது
விதவிதமாக உணவுகள் பல கிடைத்தாலும்
ருசிக்கு முக்கியம் கொடுக்காது இவர் நாக்கு  
குடும்ப உறவுகள் ஆயிரம் இருந்தாலும்
அனைத்து உயிரையும் தன் உறவாகக் கருதும் இனம்
வாழ்வில் பிடிப்பில்லாமலும்
இன்ப துன்பங்களை சுவைக்காமலும்
நடந்த தூரத்தை நினைக்காமலும்
நடக்கும் தூரத்தை கருதாமலும்
தேசமெங்கும் திரிந்து சென்று
இவர் தேடுவது தான் என்ன ???
செய்யும் காரியமோ உண்டாக்கும் சிரிப்பு
அதில் உள்ளர்த்தமோ ஆயிரம் இருப்பு
மற்றவர்களின் பதிலோ சுடும் நெருப்பு 
அனைத்தையும் சகித்துக் கொள்வது இவரின் தனிச்சிறப்பு
எளிதாகப் புரிய முடியாத புத்திசாலிகளோ ???

பரதேசி எனப் பலகுரல் திட்டினாலும்
பாராட்டாய் பட்டமாய் எடுத்துக் கொண்டு
பகலிரவு பாராமல் நினைவை நிலைப்படுத்தி
ஆண்டவனுக்கு அரும் தொண்டாற்றிடும்
ஆண்டவனின் அருட்ப் பிள்ளைகளோ ???

1 comment:

RAVINDRABALAN said...

Nice one..
keep it up..

Post a Comment