Thursday 8 March 2012

மகளிர் தினம்

பாகுபாடு இல்லாமல் ஆணையும்
பெண்ணையும் கருவில் சுமந்து
உயிர் கொடுத்து உணவு கொடுத்து
சுவாசம் கொடுத்து சுகம் கொடுத்து
வண்ணம் கொடுத்து வளர்ச்சி கொடுத்து
மிகக் கடினமான வலியுடன் பெற்றெடுத்து
இரவு பகல் பார்க்காமல் கண் முழித்து கவனித்து
உண்ணும் உணவில் ஒரு பகுதியை
உணவாக உற்பத்தி செய்து பாலாக
பச்சிளம் குழந்தைக்கு  பக்குவமாய் புகட்டி
அழுகையிலிருந்து அர்த்தங்களைப் புரிந்து
நோயிலிருந்து காப்பாற்றி கண்ணேறிலிருந்து காத்து
பேசக் கற்றுக் கொடுத்து
பழகும் முறையைப் பயிற்றுவித்து 
பள்ளிக்குப் போகும் பழக்கத்தை பதியவைத்து
வாழ்க்கையையும் கற்க உதவி செய்து
இளமைப் பருவத்தை கண்ணியமாகவும்
கற்புடனும் கடக்க கண்காணித்து
திருமணத்திருக்கு பின் வாழ்க்கையில் இன்ப
துன்பங்களை பகிர்ந்து துணையாய் நின்று
முழு மனதுடன் முழுதாய் அர்ப்பணித்து
மனித வாழ்க்கையின் துவக்கம் முதல் 
முடிவு வரை வரும் இந்த உன்னதப் பெண் உறவு
ஆண் வர்க்கம் போற்ற வேண்டிய இனிய வரவு
எப்பிறப்பிலும் சிறந்தது பெண்ணின் பிறப்பு
சொல்லி மாளாது இதன் தனிச்சிறப்பு
பெண்களைப் போற்றுவோம் !!!
பெண் உரிமைகளைக் காப்போம் !!!
பெண்களை மேலும் உயர்த்துவோம் !!!
வாழ்த்துவோம் !!! வணங்குவோம் !!!

No comments:

Post a Comment