Monday, 25 May 2015

மறப்போம்

இமைக்க மறந்தால் தான் 
தூக்கம் !!!
பகைக்க மறந்தால் தான் 
நட்பு !!!
சோம்பலை மறந்தால் தான் 
சுறுசுறுப்பு !!!
கோபத்தை மறந்தால் தான் 
குதூகலம் !!!
துன்பத்தை மறந்தால் தான் 
இன்பம் !!!
இது போன்றதை மறப்போம் !!! 
வாழ்க்கையில் சிறப்போம் !!!

-- விஜயகுமார்.இரா

நேரம்

நிழலின் உருவம் கூட மாறும் 
நேரம் மாறும் போது !!!
படும் துன்பங்கள் யாவும் மாறும் 
நேரம் வரும் போது !!!
மெய் மறந்தேன் 

என் கண்மணி 
கடித்துப் பழக 
என் கன்னங்கள் !!!
அடாவடியாகக் கடித்தாலும் 
அன்பு மேலோங்கும் 
மனம் புத்துணர்ச்சி பெறும் 
மெய் மறக்கச் செய்யும் !!!
ஒரு கடி போதும் 
உலகம் மறந்து போகும் !!!


Sunday, 10 May 2015

அன்னையர் தினம்

உடம்புக்குள் உதை வாங்கி 
உடல் வருத்தி உருவம் கொடுத்து 
அன்பாலே வளர்த்த அம்மாவை 
மன உளைச்சலுக்கு  ஆளாக்காமல் 
மன நிம்மதியோடு வாழவைப்போம் !!!
வணங்கிடுவோம் !!!
போற்றிடுவோம் !!!