Monday, 31 December 2012

புது வருடம்

வாழ்க்கை எனும் நன்செய் நிலத்தில்
தன் நம்பிக்கையை விதையாக விதைத்து
உதவும் எண்ணத்தை உரமாகப் பரப்பி
செழிப்பானச் சிந்தனையை நீராகப் பாய்ச்சி
சரியான உழைப்பைப் பயிராக வளர்த்து
தவறான செயல்களைக் களையாக எடுத்து
உடல் பயிற்சியுடன் ஆரோக்கியத்தை வேலியாக்கி
வளமான வருமானத்தை அறுவடை செய்து
வருடம் முழுதும் வாழ்நாள் முழுவதும்
மிகச் சிறப்பான வாழ்க்கை வழங்க
புத்தொளியோடு மலரட்டும் புதுவருடம்

புது வசந்தமாக வீசட்டும் புதுவருடம்
புது வழிகாட்டியாக வரட்டும் புதுவருடம் !!!

Sunday, 30 December 2012

நேரத்தோடு

வினாடிகளோடு நாமும் விரைவோம்
நிமிடங்களோடு நாமும் நீச்சலடிப்போம்
மணிகளோடு நாமும் மாற்றமடைவோம்
நாட்களோடு நாமும் நடப்போம்
வருடங்களோடு நாமும் வளருவோம்
நேரத்தோடு செயல் முடிப்போம்
நேரமில்லையெனும் அவதி நீக்குவோம் !!!

Sunday, 23 December 2012

கண்ணீர்

வலியை
வெளிப்படுத்தும் 
வழி !!!
விழி
பொழியும்
துளி !!!

Thursday, 20 December 2012

இயற்கை

இயற்கையாக
இருந்தால் இன்னலேது !!!
செயற்கையாக
வாழ்ந்தால் இன்பமேது !!!

Wednesday, 19 December 2012

இயற்கை

அழகு செழுமை
அளவோடு அனுபவித்தால் !!!
கேடு வறுமை
வரையின்றி அனுபவித்தால் !!!

Tuesday, 18 December 2012

இயற்கை



ஏற்றத் தாழ்வு
இல்லாமல்
வளம் பகிரும்
வள்ளல் !!!

Saturday, 15 December 2012

இயற்கை

அழகு தான்
அழிக்காத வரை !!!

Thursday, 6 December 2012

இயற்கை

பகல் இரவு
இரு முகங்கள்
இன்பம் துன்பம்
இரு அனுபவங்கள்
இரண்டும் இயற்கை
நில்லாத மறுசுழற்சி
துன்பத்தில் துவளாமல்
இன்பத்தில் மிதக்காமல்
வாழ்வில் உயரவேண்டும் !!!

Wednesday, 5 December 2012

இயற்கை

பிறப்பும் இறப்பும்
மாற்ற முடியாதது
இயற்கையின் வலிமை !!!
செயற்கை முயற்சி
கண்டுபிடிப்பு அனைத்தும்
அடங்கும் இயற்கையில் !!!
இயற்கையில் இயற்கை இயற்கை !!!

Monday, 3 December 2012

இயற்கை

அடர் மேகம் அழகாக அந்தி வானம் ஆள
வளர் நிலா இருள் நீக்க வலம் வர
வெளிர் நட்சத்திரம் அளவோடு வெளிச்சம் தர
அதிகாலை வரை விழிப்போடுக் காவல் தொடர 
கதிரவன் கண்ணுறக்கம் விழித்தெழுந்து கடல்  குளித்து
உற்சாகத்துடன் ஒளி வெள்ளம் பாய்ச்ச உயிர்கள் அனைத்தும்
புத்துயிர் கொண்டுப் புதுநாள் காண இயற்கையுடன்
இணை செல்ல உயிர் வாழ உணவு தேடி
உழைக்க வாழ்க்கைச் சக்கரம் வழி விட
பகல் முழுதும் பாடுபடப் பனித்துளி போல்
வியர்வை சொட்ட தண்ணீர் வந்து தாகம் தணிக்க
தென்றல் வந்து வியர்வை விலக்கப் பூமித்தாய்
உணவளி(ள)க்க  உயிர்கள் அனைத்தும் பசியாறப் பகல்
பொழுதும் உறங்கச் செல்லப் பகலவனும் படுக்கச் செல்ல
அடர் மேகம் அந்தி வானம் ஆள  துவங்குகிறது !!!