Saturday, 27 October 2012

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

தேனினும் பழக இனிமையானவர்
பாலினும் உள்ளம் தூய்மையானவர்
சிங்கத்தினும் அடங்கா வீரமானவர்
கர்ணனினும் கொடை வள்ளலானவர்
எறும்பினும் உழைப்பில் சுறுசுறுபானவர்
கணினியினும் வேகம் நிறைந்தவர்
சூரியனினும் எதிரியைச் சுட்டெரிப்பவர்
நிலவினும் அன்பால் குளிர்விபவர்
நீரினும் தாகத்தைத் தணிப்பவர்
காற்றினும் சுவாசத்தைக் கொடுப்பவர்
வானினும் மனதில் பெரியவர்
நிலத்தினும் இடம் அளிப்பவர்
தேசியத்தையும் தெய்வீகத்தையும் கண்ணாக
மானத்தையும் மரியாதையையும் காத்த
மனித தெய்வம் தேவர் ஐயாவை
வான்புகழ வணங்கி ஆசி பெறுவோம்
பசும்பொன்னில் அனைவரும் ஒன்று கூடுவோம் !!!

Tuesday, 23 October 2012

தேவர் திருமகனார்

பசும்பொன்னில் விளைந்த சுத்தத் தங்கம்
பார் போற்றிப் புகழும் சிங்கம்
தேசியமும் தெய்வீகமும் இவரது அங்கம்
அறிவாற்றல் தெரிந்தது நாடு எங்கும்

சீமான் பிறந்தது தேவர் இனம்
மக்களுக்கு நன்மை செய்யும் மனம்
எடுத்த காரியத்தை வெற்றியாக்கும் குணம்
வணங்கி அருள் பெறுவோம் தினம் !!!

ரோஜாப்பூ

இதழ்களை விரித்தாய்
அழகாய்ச் சிரித்தாய்
வண்ணங்களில் மலர்ந்தாய்
எண்ணங்களில் நிறைந்தாய்
கூந்தலில் குடியேறினாய்
மாலைக்கு மணமாகினாய்
நேரமானதும் நினைவிழந்தாய்
இரவானதும் மறைவானாய்
மறுஜென்மம் உருவெடுப்பாய்
மறுசெடியில் ஜனனிப்பாய் !!!

Friday, 19 October 2012

மழை

மனதை நனைக்கும் மழை
மகிழ்ச்சியைக் கொடுக்கும் மழை
செழுமையை வழங்கும் மழை
செல்வதைச் சேர்க்கும் மழை 
வறட்சியை ஒழிக்கும் மழை 
வறுமையை அழிக்கும் மழை
அன்பாய்ப் பெய்யணும் மழை
அழிவில்லாமல் காக்கணும் மழை !!!

Wednesday, 17 October 2012

சொந்தமாக்கலாம்

பணம், நகை
வீடு, நிலம் மட்டுமல்ல
நினைக்கும் நல்லெண்ணங்களையும்
செய்யும் நற்செயல்களையும்
உதவும் நற்குணத்தையும்
மூளையிலிருந்து உருவாகும்
அனைத்துக் கற்பனைகளையும்
நமது சொந்தமாக்கலாம் !!!
கருத்துகளை அனைவரிடமும்
பகிர்ந்து பந்தமாகலாம் !!!

Tuesday, 16 October 2012

வாய்ப்பு

கிடைக்கும் போதுக் கட்டிப் பிடிக்கணும்
தூரப் போனா ஓடி அணைக்கணும்
தெரியலைனா சரியாத் தேடித் பார்க்கணும்
வரவுக்குத் தகுதியோடுக் காத்து இருக்கணும் !!!

Monday, 15 October 2012

நிதானம்

நிதானமாக ஓட்டிச் செல்வோம்
நீண்ட ஆயுளை வெல்வோம் !!!

Sunday, 14 October 2012

இரவு

நித்திரையைத் துணைக்குத் தேடும் 
களைப்புக் கரைந்து ஓடும் 
மனம் நிம்மதி நாடும்
இமையும் கண் மூடும் 
கனவு நிழல் ஆடும்
உடம்பும் தூக்கம் தொடும்
கவலை மற !!! தூக்கம் திற !!!

என்னவாகும் ???

அந்தப் பக்கம்
இந்தப் பக்கம்
பார்த்தும் தயக்கம்
உடம்பும் வியர்க்கும்
இருந்தும் நெருங்கும்
விருந்தும் வருந்தும்
அருகில் நிற்கும்
உருவில் வெட்கம்
சிரித்தால் சொர்க்கம்
நினைத்தால் திக்கும்
முயற்சி எடுக்கும்
பலன் கொடுக்கும்
கைகள் கோர்க்கும்
மெய்கள் சேர்க்கும்
கட்டி அணைக்கும்
முத்தம் கொடுக்கும்
அடுத்து நினைக்கும்
கதவு திறக்கும்
தூக்கம் கெடுக்கும்
கனவில் மயக்கம்
மனக்கண் விழிக்கும்  
இதயம் தவிக்கும்
நிழலும் நிஜமாகுமா ???
கனவும் நனவாகுமா ???

Tuesday, 9 October 2012

எங்கே

மூச்சு விட்ட அனல் காற்று எங்கே
வாயில் உதிர்த்த  வார்த்தை எங்கே
கடலில் விழும் நிறமில்லா மழைத்துளி எங்கே
லஞ்சம் வாங்காத அரசு அலுவலகம் எங்கே
புறம் பேசாதப் புதிய ஜீவன் எங்கே
அளக்காமல் வாரி வழங்கிய வள்ளல் எங்கே
எதிர்பாராமல் உதவி செய்யும் உள்ளம் எங்கே
கடவுளின் மறு உருவான கருணை எங்கே
எங்கே??? எங்கே??? எங்கே???

Thursday, 4 October 2012

புகைப்பழக்கம்


புகைக்கும் போது மனதிற்கு பேரின்பம்
புண்ணாக்கும் போது நோய்க்கு ஆனந்தம்
புற்றாக்கும் போது வலிக்கு வளைகாப்பு
புதைக்கும் போது குடும்பத்துக்கு பேரிழப்பு !!!

Monday, 1 October 2012

முதியோர் தினம்

அறிவில் முதிர்ந்தவர்கள்
அன்பில் முதிர்ந்தவர்கள்
பண்பில் முதிர்ந்தவர்கள்
பக்தியில் முதிர்ந்தவர்கள்
சக்தியில் முதிர்ந்தவர்கள்
சாதனையில் முதிர்ந்தவர்கள்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள்
முதிர்ச்சியான ஆலமரம் மட்டுமே
முழுமையான நிழல் தரும்
முதியோரை ஒதுக்காமல்
அன்பாய் அரவணைப்போம் !!!
அனுபவம் பெறுவோம் !!!
தலை வணங்குவோம் !!!

புகைப்பழக்கம்


அருகிலிருப்பவரையே மறைக்கும் புகை
ஆபத்தைக் கொடுக்கும் வகை
இடுகாட்டில் எரிக்கும் வரை
ஈகை காட்டும் இருட்டறை
உறவுகள் இன்பத்தை அழிக்கும்
ஊரும் உன்னைப்  பழிக்கும்
எங்கும் குடிக்கும் பழக்கம்
ஏனையவரையும் துணைக்கு அழைக்கும்
ஐயமில்லாமல் நிறுத்தணும் புகையை
ஒரு நிலைப்படுத்தணும் மனதை
ஓசியானாலும் வெறுக்கணும் புகைப்பிடியை !!!