Monday, 27 May 2013

தாகம்

தாகத்தைத் தீர்ப்பது மேகம்
மோகத்தைத் தீர்ப்பது தேகம் !!!

Monday, 20 May 2013

களைப்பு

வானம் தொட்டு வெயிலில் வந்த
காற்றை உன்னிடம் அனுப்பி வைத்தேன்
உன்னைத் தொட்டு இ(க)ளைப்பறட்டும் என்று !!!

Sunday, 12 May 2013

அன்னையர் தினம்

தன் வயிறு நிறையாவிடினும்
நம் வயிற்றுப் பசியடங்க
உடம்பு ஒத்துழைக்கா விடினும்
பக்குவமாய் சமைத்துப் பரிமாறி
பிள்ளை உடல் வளர்த்து 
ஆளாக்கி அழகு பார்க்கும்
தெய்வம் காலடியில் வணங்கி
ஆசி பெறுவோம் இந்த அன்னையர் தினத்தில் !!!

அம்மா

உலகைக் காட்டும் அம்மாவை
உலகில்  நிம்மதியின்றி அலையை விடாதே !!!

அம்மா

ஆதரவாய் அணைத்து முத்தம் கொடுக்கும் போதும்
அன்பாய் பிசைந்து சோறு ஊட்டும் போதும் 
கை பிடித்து நடை பழக்கும் போதும்
தாலாட்டுப் பாடி தூங்க வைக்கும் போதும்
வளர்ச்சியின் ஒவ்வொரு பரிமாணத்தின் கவனிப்பின் போதும்
அன்னையிடம் இருக்கும் உண்மை ஆண்டவனுக்கும் மேலே
அன்னையைக் வணங்கி வாழ்வது நமதுக் கொடுப்பினை 
உயிர் இருக்கும் வரை அன்னையின் அன்பில் கவனிப்பில்
உயிர் இருக்கும் வரை அன்னையைக் காப்பதில் நேசிப்பதில் !!!

Wednesday, 8 May 2013

சூரியன்

ஏன் இவ்வளவு தாகம்
பூமியின் நீரை மட்டுமல்லாது
உயிரினத்தின் நீரையும் உறிஞ்சுகிறதே !!!

நீ

எழுதும் போது எழுது கோலாய்
நீயிருந்தால் எழுத்துகள் அத்தனையும் முத்துக்களே !!!

Friday, 3 May 2013

வெறுப்பு

மனங்களில் வரும் காய்ச்சல்
மனம் விட்டுப் பேசுவதால் குணமாகும் !!!

கவிதை

எத்தனையோ கவிதை எழுதினேன்
என் கைகள் அலுத்துப் போனது
ஆனால் கவிதை அசரவில்லை
உன் அழகை வர்ணிக்க !!!
வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக
வழிய வந்து நிற்கின்றன !!!

Wednesday, 1 May 2013

தொழிலாளர் தினம்

உடம்பின் அனைத்துப் பாகங்களையும்
மூலதனம் ஆக்கி உழைத்து
உலகத்தை இழுத்துச் செல்லும்
பாட்டாளிக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் !!!