ஆதரவாய் அணைத்து முத்தம் கொடுக்கும் போதும்
அன்பாய் பிசைந்து சோறு ஊட்டும் போதும்
கை பிடித்து நடை பழக்கும் போதும்
தாலாட்டுப் பாடி தூங்க வைக்கும் போதும்
வளர்ச்சியின் ஒவ்வொரு பரிமாணத்தின் கவனிப்பின் போதும்
அன்னையிடம் இருக்கும் உண்மை ஆண்டவனுக்கும் மேலே
அன்னையைக் வணங்கி வாழ்வது நமதுக் கொடுப்பினை
உயிர் இருக்கும் வரை அன்னையின் அன்பில் கவனிப்பில்
உயிர் இருக்கும் வரை அன்னையைக் காப்பதில் நேசிப்பதில் !!!