Thursday, 27 September 2012

காளை

சாதனைக்கு வளரணும் காளை
சோதனைக்குப் பயந்தாக் கோழை

Monday, 24 September 2012

தடம்

கடற்கரையில் எத்தனைப் பாதத்தடங்கள்
உன் பாதத்தின் படிவங்கள்
மனதில் நிற்கும் வடிவங்கள்
உன் வருகையை அறிந்தேன் !!!
புரியவில்லை
எனக்காக வந்து சென்றாயா ???
மாற்றானுடன் மகிழ்ந்து சென்றாயா ???

Sunday, 23 September 2012

தோல்விப் பாடம்

பாடம் படித்தால் மட்டுமே
தேர்வில் வெற்றி  பெற முடியம் 
பள்ளிப் பாடம் இது !!!
தோல்வி அடைந்தால் மட்டுமே 
வாழ்வில் வெற்றி அடைய முடியும்
வாழ்க்கைப் பாடம் இது !!!

Tuesday, 18 September 2012

பிள்ளையார் சதூர்த்தி

அதிசய உருவம் கொண்ட ஐங்கரனே
துதிக்கையோடுத் துன்பம் தீர்க்கும் சிவமகனே
தாய்ப்பற்று அதிகம் கொண்டத் தலைமகனே
ஞானப்பழத்தை அறிவால் அணைத்த ஆண்டவனே
எச்செயல் துவக்கத்திலும் முன்னிற்கும் மூத்தவனே
பக்தர்களைப் பகையிலிருந்து காக்கும் பரம்பொருளே
சதூர்த்தி நாளில் சங்கடங்கள் தீர்த்து
நலத்துடன் இருக்க மக்களை ஆசிர்வதித்து
அனைத்துச் செல்வங்களையும் அள்ளிக் கொடுத்து
அருள்புரிய வேண்டி சண்முகன் சகோதரனே
உன்னை வணங்கிப் பாதம் பணிகிறோம் !!!

Sunday, 16 September 2012

வேண்டாம் தற்கொலை

நான் படைக்கவில்லை இந்த உடம்பை
எனக்கு உரிமை இல்லை அழிப்பதற்கு
நான் கொடுக்கவில்லை இந்த உயிரை
எனக்கு உரிமை இல்லை எடுப்பதற்கு
அவசரமான முடிவு அறிவை அடக்கும்
நிதானமான சிந்தனை அழிவைத் தடுக்கும்
பிரச்சனை எதுவானாலும் ஆறவிடு
நேரம் எடு தெளிவு பெறு முடிவு எடு
தற்கொலை எண்ணம் தரணியில் இருக்காது
தைரியமான வாழ்க்கைக் கை வசப்படும்
தற்கொலைக் கண்ணாடியைத் தவற விடு
சுக்கு நூறாகட்டும் தூள் தூளாகட்டும்
நம்பிக்கைக் கண்ணாடியை உறுதியோடு பார்
உலகை வாழ ஆசை உள்ளதகாக் காட்டும்
புத்துணர்ச்சி பெறு புது வாழ்வு துவங்கு
 
மானம் போனாலும் ஊனம் ஆனாலும்
நம்பிக்கையை நட்டு வை நல்மரமாக   
முயற்சியோடு உழைப்பெனும் தண்ணீர் ஊற்று
ஆலமரமாக விழுதுகளுடன் பரந்து விரிந்து
பார்புகழப் பரம்பரை வாழுமுன் நிழலில் !!! 
தோன்ற வேண்டும் எண்ணம் மனதில்
இப்படி எல்லாம் எழுதுபவனே இருக்கையில்
நான் ஏன் தற்கொலை செய்யணும்???

Saturday, 15 September 2012

எதில் அழகு

பெண்ணவளின் கண்ணசைவிலா
பிஞ்சதுவின் புன்னகையிலா
ஆணவனின் வீரத்திலா
மயிலதுவின் சிறகிலா
வானவிலதுவின் வண்ணத்திலா
நிலவதுவின் வெண்ணொளியிலா
மொட்டதுவின் மலர்ச்சியிலா
அருவியதுவின் வீழ்ச்சியிலா
வயலதுவின் பசுமையிலா
தீபமதுவின் சுடரொளியிலா
மனமதுவின் நல்லெண்ணத்திலா
நாக்கதுவின் நாணயத்திலா
செயலதுவின் சிறப்பிலா
உழைப்பதுவின் உண்மையிலா
எதில் அழகு ???

Friday, 14 September 2012

இனிமை - தனிமை - கொடுமை

அவள் வந்த பின் சேர்ந்தது
அவள் சென்ற பின் வந்தது
அவள் செல்லும் போது சிரித்தது
சும்மா.....ஹி ஹி ஹி !!!

Sunday, 9 September 2012

உதவி

உதவி செய்வோம்
ஊனமுற்றவருக்கும்
உறவிழந்த முதியவருக்கும்
உறவில்லா அனாதையர்க்கும்
கல்விக்குக் காசில்லாக் கண்மணிகளுக்கும் !!!

பெண்மை

ஆசை எனும் அலை பாய
பாசம் எனும் படகு ஆட
ஆண்மை எனும் அனல் விழ
மோகம் எனும் மேகம் சூழ
பேதை எனும் பெயர் வர
கூச்சம் எனும் குரல் எழ
காமம் எனும் கதிரை
தாகம் எனும் தவிப்பை
பேராண்மை எனும் பெண்மை
மேன்மை எனும் மென்மையோடு
கட்டுப்பாடு எனும் கருவியால்
ஆசை எனும் அதை அடக்கம் செய்கிறது !!!

Wednesday, 5 September 2012

லட்டு

உதிரிப் பூந்திகள் தனித் தனியாயிருக்க 
உறவைத் தேடி உள்ளம் வாட
நெய் எனும் சுவையூட்டும் விருந்தாளி 
நெருக்கத்தை ஏற்படுத்த நேரம் ஆக
ஒன்றுக்கொன்று கைப்பிடிக்க  உருண்டை
வடிவில் உருவானது இனிப்பான பந்தம் !!! 
தேவையானத் துட்டு செலவு செய்தால்
அனைவர் நாவுக்கும் இது சொந்தம் !!!

Monday, 3 September 2012

ஆசிரியர்

வார்த்தைகளைத் தெளிவாகவும்
அர்த்தங்களை அழகாகவும்
சூத்திரங்களைச் சுருக்கமாகவும்
பாடங்களைக் கருத்தோடும்
புரியாததைப் புன்முறுவலோடும்
அறியாததை அகமகிழ்வோடும்
பணிவைப் பக்குவமாகவும்
பண்பாட்டை நிச்சயமாகவும்
முயற்சியை முக்கியமாகவும்
மரியாதையை மகிழ்ச்சியோடும்
கற்றுக் கொடுக்கும் கல்விக் கடவுள் !!!